*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தா்களுக்கு வணக்கம்*!!🙏💐💐
*தேடல்* என்பது முயற்சியின் முனைப்பிற்கு *முடிசூடல்* போன்றது. முயற்சியின் முனைப்பினை முழுமையுடன் செலவழிப்பதில் அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் என்றும் முற்படுகின்றது. அந்த வகையில் அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றத்தின் *109 - வது* கூட்டம் வரும் *ஜுலை 6 வெள்ளிக்கிழமை* *சி.வி. குடியிருப்பு வளாகத்தில்* (அல்கோபார்) நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் *சொ.வே. ஜெயமணி* அவர்களின் “*கோடை விடுமுறை*” என்னும் சுவைமிகு நெறியாளுகையில் நடைபெறவுள்ளது மேலும், சொ.வே. சுரேஷ் பொன்னுசாமியின் “*நெருநல்” என்னும் இன்றைய சொல்லைக் கொண்டு *மூன்று திட்டப் பேச்சுகள்*, *திடீா்ப் பேச்சு*, *சிறுவர் நேரம்* என்று மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இத்துடன் *வரைவு நிகழ்ச்சி நிரலையும்* இணைத்துள்ளேன்.
*துணைத் தலைவா் (கல்வி)*,
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு.
வரைவு நிகழ்ச்சி நிரல்
No comments:
Post a Comment