*பெண்ணே!!*
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு
உள்ளிருந்து திறம் காட்டும்
*பெண்ணினத்தின் மேன்மையை*,
முன்னிறுத்தும் வழி தேடு!
என, பெண்ணின் பெருமை பேசும் *அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்*. நம் மன்றத்தின் *125 வது* கூட்டம் வரும் வெள்ளிக் கிழமை *மார்ச் 15* அன்று நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில், “*ஈன்று புறம் தந்த**” பெண்ணின் பெருமையைப் போற்றும் படியாக அமையவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நம் மன்றத்தில் பைந்தமிழ் பேசும் *சொ.வே. வாசுகி ராஜராஜன்* அவர்களின் “*அழகின் அழகே*” என்னும் நெறியினைக் கொண்டு சீர்மிகு மூன்று *திட்டப்பேச்சுகள்* மற்றும் *மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கமும்*நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் 125 வது கூட்டத்தின் *வரைவு நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்*.நன்றி.
குறிப்பு : கருத்தரங்கின் கருப்பொருள் “*பெண்ணின் பெருமை போற்றும் படி*” அமைந்திருக்க வேண்டும் தலைப்பு *உங்கள் விருப்பம்.*
*துணைத் தலைவர் கல்வி
*சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*
No comments:
Post a Comment