*கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்*
*கழையிடை ஏறிய சாறும்*,
*பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்*
*பாகிடை ஏறிய சுவையும்,*
*நனிபசு பொழியும் பாலும் - தென்னை*
*நல்கிய குளிரிள நீரும்*,
*இனியன என்பேன் எனினும் - தமிழை**
*என்னுயிர் என்பேன் கண்டீர்!*
கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் - அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் *பாவேந்தர் பாரதிதாசன்* கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா!.
இத்தகு சுவைமிகு தமிழின் மீது பற்று கொண்ட*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!!* நம் மன்றத்தின் *126 - வது கூட்டம்* வரும் *மார்ச் 29 வெள்ளிக் கிழமை* நடைபெறவிருக்கிறது. இதில், நம் மன்றத்தின் தமிழ்த் தென்றல் *சொ.வே. வெங்கடேஸ்வரன்*அவர்களின், நெறியாளுகையில் சொல்லேர் உழவாக இன்றையச் சொல் மற்றும் இலக்கண ஆசானாக *சொ.வே. அரவிந்தன்* அவர்களின் *“ஏண்”*என்னும் சொல்லைக் கொண்டு *மூன்று திட்டப் பேச்சுகள்* மற்றும் *திடீர் பேச்சரங்கம்*என்று கோடையில் குளிர் தமிழ் காற்றினைக் கொண்டாட!! *அனைவரும் வாரீர்*இத்துடன் 126-வது கூட்டத்தின் *வரைவு நிகழ்ச்சி நிரலையும்* இணைத்துள்ளேன்.
துணைத் தலைவர் கல்வி
*சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*
No comments:
Post a Comment