Saturday, October 14, 2023

 இன்று நடந்த (13 அக்டோபர் 2023) நமது மன்றத்தின் 219 வது கூட்டத்தில் சோ.வே வெங்கட் மற்றும் திறன்மிகு சொல்வேந்தர் உமா வெங்கட் அவர்களின் பொன்விழா திருமண நாளையொட்டியும், திறன்மிகு சொல்வேந்தர் மோகன்தாஸ் மற்றும் சொல்வேந்தர் அருண் அவர்களின் பிறந்தநாள் விழாவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சொல்வேந்தர்கள் தமது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு விழா நாயகர்களை வாழ்த்தியும் கலாய்த்தும் மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
(வீடியோ உதவி : சொல்வேந்தர் மீரான்)


219 வது கூட்டம்

 அனைவருக்கும் வணக்கம்,

நமது மன்றத்தின் 219 வது கூட்டம் இன்று 13 அக்டோபர் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நெறியாளராக சொ.வே. சுரேஷ் சுப்பிரமணியம் அவர்கள் ஆசுகவி என்ற நெறியுடன்,மேலும் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்குபெற்று கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

விருதுகள்
சிறந்த பேச்சாளர்: சொ.வே. நாகேந்திரன்
சிறந்த மதிப்பீட்டாளர்: சொ.வே. சிவதயாளன்
சிறந்த அலுவலர் பணி: சொ.வே. சுரேஷ் சுப்ரமணியம்  

விருது பெற்றவர்களுக்கும் மேலும் வருகை புரிந்து சிறப்பித்த உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் எனது நன்றியும் வாழ்த்துகள்.     

நமது மன்றத்தின் அடுத்த கூட்டம் அக்டோபர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்து கொள்கிறேன். இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.  

நன்றி
கனகராஜ்
தலைவர், க.ஆ. 2023 – 2024









 

தொடர்புக்கு

Name

Email *

Message *