அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்
மலையிடையேபிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து
உலகின் இருளைப்
போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி
இரண்டு மட்டுமே!
ஒன்று செங்கதிர், மற்றது
செந்தமிழ்!
என்று
தண்டியலங்காரம் பேசுகிறது,
நம் அசதிக்குச்
சுடர் தந்த தேன் என்னும் பாவேந்தரின் பாட்டுக்கு ஒப்ப நம் மன்றத்தில் வரும் 128 -வது கூட்டம் மே 3 ம் தேதி மிகச் சிறப்பாக அல்கயாம் உணவக அரங்கில் நடைபெறவிருக்கிறது. இதில்
பொறுப்புகள் பலவிதம் என்னும் நெறியுடன் உங்கள் முன்னால் வரவிருப்பவர் நம் மன்றத்தின்
பெண்களின் நடிகர் திலகம் சொ.வே.
உமாவெங்கட் அவர்கள். மேலும், சொல்லேர்
உழவாக சொ.வே. பாக்கியலட்சுமி வேணு அவர்களின் வன்னம் என்னும் இலக்கணச் சொல்லைக்
கொண்டு மூன்று திட்டப் பேச்சு மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியாகக் கதை சொல்லி மற்றும்
மே தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான சுட்டிமன்றம்(பட்டிமன்றம்) நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்துடன் 128 வது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்.
நன்றி.
துணைத் தலைவர் கல்வி
சொ.வே.
பாக்கியலட்சுமி வேணு
No comments:
Post a Comment